பெங்களூரு: பெங்களூருவில், கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் தனியாகஇருந்ததை நோட்டமிட்டு வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்தப் பெண் அதிகாரி கர்நாடக மாநில அரசின் சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். கொல்லப்பட்ட அதிகாரிக்கு வயது 37 ஆகிறது.
கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீமா. கர்நாடக மாநில சுரங்கம் மற்றும் மண்ணியல் துறையில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது வீடு குவெம்பு நகரில் உள்ள தொட்டகள்ளசந்திரா பகுதியில் உள்ளது. இது வாடகை வீடாகும். இவரது கணவர் வெளியூர் போயிருந்தார். வீட்டில் பிரதீமா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீடு பூட்டியே கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் பிரதீமா கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்ட பிரதீமாவின் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். பிரதீமா எல்லோரிடமும் நன்றாக, அன்பாகப் பேசக் கூடியவராம். இதுகுறித்து அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,எட்டு வருடமாக பிரதீமா குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார்கள். அவர்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. மிகவும் அன்பானவர்கள் என்றார்.
சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால் சுரங்க லைசென்ஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதாவது அவருக்கு இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}