பாஜகவுக்கு புதிய சிந்தனை தேவை.. தோல்விக்கு 3 காரணம்தான்.. பொம்மை ஓபன் டாக்!

May 17, 2023,03:08 PM IST

பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைய  முக்கியமான மூன்று காரணங்களை வெளியிட்டுள்ளார் முதல்வர் பி.எஸ். பொம்மை.


கர்நாடக சட்டசபைத் தேர்தலை பாஜக மிகப் பெரிதாக எதிர்பார்த்தது. காரணம் இங்கு பெறும் வெற்றி அகில இந்திய அளவில் அக்கட்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்பதோடு, தெற்கில் பாஜக வலுவாக இருக்கிறது என்ற செய்தியை வடக்குக்கு பாஸ் செய்வதும் முக்கியமாக இருந்தது. ஆனால் எல்லாக் கணக்கும் தப்பாகி விட்டது.


காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விட்டது.  இது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்தத் தோல்வி மூலம் தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இருந்த ஒரே ஒரு ஆட்சியும் பறி போய் விட்டதுதான் அக்கட்சியினரை நிலை குலைய வைத்துள்ளது.




இந்தத் தோல்வி குறித்து பதவி விலகிச் செல்லும் முதல்வர் பி.எஸ். பொம்மை என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவரது பேட்டியிலிருந்து:


காங்கிரஸ் சீக்கிரமே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது. வழக்கமாக பாஜகதான் விரைவாக இருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் தாமதம் செய்து விட்டோம். எங்களது முடிவுகளை காலதாதமாக எடுத்ததும் ஒரு காரணம்.


பாஜகவின் செய்திகள் எதுவும் மக்களை சென்றடையவில்லை. இத்தனைக்கும் நாங்கள் அதிக அளவிலான மக்கள் கூட்டங்களை நடத்தினோம். ஆனாலும் மக்களுக்கான செய்தி எதுவும் அவர்களை அடையவில்லை.


வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது. இதுவும் வாக்காளர்கள் காங்கிரஸுக்கு பெருவாரியாக வாக்களிக்க முக்கியக் காரணம். இலவசங்களை மக்கள் பெரிதாக நினைத்து விட்டார்கள்.


பாஜகவின் வாக்கு வங்கி சரியவில்லை. அப்படியேதான் இருக்கிறது. தெற்கு கர்நாடகாவில் வழக்கமாக ஜேடிஎஸ்தான் வலுவாக இருக்கும். அங்கு காங்கிரஸுக்கு இந்த முறை ஆதரவு கிடைத்ததால்தான் அக்கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட 5 சதவீத ஜேடிஎஸ் வாக்குகள் காங்கிரஸுக்குத் திரும்பியுள்ளன.


2018 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 36 சதவீதமாக இருந்தது. அதையே இப்போதும் நாங்கள் பெற்றுள்ளோம். எங்களுக்கு வாக்களித்தோர் குறையவில்லை. ஆனால் ஜேடிஎஸ்ஸின் வாக்கு விகிதம் 18.3 சதவீதத்திலிருந்து 13.3 சவீதமாக குறைந்து விட்டது. அது விட்ட வாக்கு விகிதத்தை காங்கிரஸ் பிடித்துக் கொண்டு, 38.1 சதவீதத்திலிருந்து 42.9 சதவீதமாக அதிகரித்து விட்டது.


தேர்தல் தோல்விக்கு முழுக் காரணத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். தலைவராக இருப்பவர்தான் தோல்விக்கும் காரணம். அப்போதுதான் சரியான திசையில் நாம் செல்ல முடியும்.  லோக்சபா தேர்தலுக்கு நாங்கள் சீக்கிரமே தயாராக வேண்டும். அது முக்கியம்.  பாஜகவின் நிலைமை சரியாக சில மாதங்கள் பிடிக்கலாம்.  ஆனால் நீண்ட நாட்கள் காத்திருக்கக் கூடாது. கட்சிக்கு புதிய சிந்தனை தேவை, இளைஞர்கள் தேவை, அனைத்து மட்டங்களிலும் இது நடக்க வேண்டும் என்றார் பொம்மை.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்