விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கர்நாடகத்தில் செம மழை.. கே.ஆர்.எஸ் அணைக்கு கிடுகிடு நீர்வரத்து!

Jun 27, 2024,10:21 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 


கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள குடகு, உத்தர்கன்னடா மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை  கொட்டி வருகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெங்களூர் குடகு தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடகு  மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் சூழலில் இன்று அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று  பெய்த மிக கனமழையால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.




இந்த இரண்டு அணைகளும் நிரம்பினால்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதால் இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.


கேரளாவிலும் செம மழை 


கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது  இந்த பருவமழை மேலும் தீவிரமடைந்தது வயநாடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தலைநகர் டெல்லியிலும் கூட பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையிலிருந்து டெல்லியில் நல்ல மழை பெய்து வருகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையம்: 


தமிழ்நாடு,  புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.

அதேபோல கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்