பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட்டில்தான் சீட் கிடைக்கும் என்று பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகளிர் இலவசப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது.
ஆனால் இன்று வெளியான எக்சிட் போல் முடிவுகளைப் பார்த்தால் பெரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான் மிஞ்சுகிறது. அதாவது சிங்கிள் டிஜிட்டில்தான் காங்கிரஸுக்கு அங்கு வெற்றி கிடைக்கும் என்று எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட எல்லா எக்சிட் போல் முடிவுகளுமே அப்படித்தான் சொல்லியுள்ளன. அதாவது சொல்லி வைத்தாற் போல அத்தனை பேரும் ஒரே மாதிரி சொல்லியுள்ளனர்.
இந்தியா டுடே எக்சிட் போல் கணிப்பில், காங்கிரஸ் (3-5) , பாஜக (20-22) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்என் நியூஸ் 18 கணிப்பில், காங்கிரஸ் (3-5), பாஜக (23-26) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் கி பாத் கணிப்பில் - காங்கிரஸ் (5-7) , பாஜக (21-23) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சிவோட்டர் கணிப்பில், காங்கிரஸ் (3-5) , பாஜக (23-25) என்று சீட்டுகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும் பாஜக தனது பலத்தை இன்னும் முழுமையாக இழக்கவில்லை என்றும் ஊகிக்க முடிகிறது.
ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!
கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்
மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்..!
கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டில்லியின் அடுத்த முதல்வர் யார்?
மதுவிலக்கால் கூட்டணியில் பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...திருமாவளவன் அதிரடி
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம்... சவரன் ரூ.55,000ஐ தாண்டியது
அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு
{{comments.comment}}