கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்டது தான் இந்த கண்ணாடி நடைபாலம். இப்பாலம் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.
இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் இங்கு அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை கண்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், இந்த கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 15ம் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் கண்ணாடி பாலம் 4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?
Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!
தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!
அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!
Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?
கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!
{{comments.comment}}