சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருகி வருகிறது. நகரமயமாக்கலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அரசு உருவாக்கி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார். அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த டிசம்பர் மாதம் அவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தபோது கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணை வந்து விட்டது.
இவை மட்டுமல்லாமல், கவுந்தம்பாடி, அரூர், சூலூர், மோகனூர், நார வாரி குப்பம், வேப்பம்பட்டு ஆகிய நகராட்சிகளும் விரைவில் உருவாக்கப்படவுள்ளன. ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் எல்லைகள் விரிவாக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
நோட் பண்ணிக்கோங்க மக்களே... தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!
கார்த்திகை விரதமும், சதுர்த்தி விரதமும் இணைந்து வரும் ஏப்ரல் 1
நான் ஏன் இப்படி??? (சிறுகதை)
உலகின் நீளமான நாக்கு .. கின்னஸ் சாதனை படைத்த.. அமெரிக்க பெண்..!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... நேற்று சவரன் ரூ.67,000... இன்றோ ரூ.68,000!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மீண்டும் குறைவு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}