ஹைதராபாத்: கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ், மோகன்லால் உடன் இணைந்துள்ளார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா திரைப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் தான் போடப்பட்டது. தற்பொழுது முதல் கட்ட படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் தொடங்கி உள்ளது.
பான் இந்தியா படமான இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ், கம்ப்ளீட் ஆக்டர் என்று அழைக்கப்படும் மலையாளத்து மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இந்த மெகா கூட்டணியில் தற்பொழுது இணைந்துள்ளார்.
கண்ணப்பா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருவதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனலாம்.
இந்த காவிய திரைப்படத்தை உயிர்பிக்கும் நிலையில் தயாரிப்பு துறையினர் ரெடியாகி வருகின்றனர்.
சிவ மெச்சிட கண்ணப்பா என்ற கன்னடத் திரைப்படத்தில் தின்னா -அர்ஜுனா கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தது, தற்போது கண்ணப்பாவில் அவருக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சிவராஜ்குமார் தலைசிறந்த பங்களிப்பை தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஸ்டார் பிளஸ்சில் மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்குகிறார். கண்ணப்பா திரைப்படம் இந்திய திரையுலகில் கதை சொல்லலை மறுவரையறை செய்வதோடு மட்டுமல்லாமல், கண்ணப்பாவின் அசாதாரணக் கதையையும், சிவபெருமான் மீதான அவரது அசைக்க முடியாத பக்தியையும் விவரிக்கும் காவியமாக உருவாகி வருகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் இணைந்திருந்தனர். இப்போது தெலுங்குப் படத்தில் கை கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்
டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!
விஜய் கட்சியின்.. விக்கிரவாண்டி மாநாட்டு தேதிக்கு பின்னால இவ்வளவு மேட்டர் இருக்கா?
தமிழக வெற்றிக் கழக மாநாடு.. ஏற்பாடுகள் பிரமாண்டம்.. பாதுகாப்புக்கு மட்டும் 5,500 போலீஸ்!
சென்னை பீச்சில் அடாவடி செய்த.. சந்திரமோகன் தனலட்சுமி.. ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!
Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்
தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு
ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!
தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!
{{comments.comment}}