பூஜை முடிந்து.. கோவில் திறந்ததும்.. "ஜெய்ஸ்ரீராம்".. கங்கனா ரனாவத் ஆவேச முழக்கம்!

Jan 22, 2024,04:47 PM IST
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலில் இன்று பிரான பிரதிஷ்டை முடிந்ததும், நடிகை கங்கனா ரனாவத், உற்சாத்துடனும், ஆவேசத்துடனும், ஜெய் ஸ்ரீராம் என்று தொடர்ந்து விடாமல் முழங்கினார்.

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடந்தேறியது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புப் பூஜைகள் நடத்தினர்.

இந்த விழாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைத்துறையினர் அதிக அளவில் காணப்பட்டனர். சாதாரண நடிகர்கள் முதல் சூப்பர் நடிகர்கள் வரை குவந்திருந்தனர். அனைவரும் உற்சாகத்துடனும், பரவசத்துடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர்.



அதிலும் நடிகை கங்கனா ரொம்பவே உற்சாகத்துடன், அதீத பரவசத்துடன் காணப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே ராமர் கோவிலுக்காக குரல்  கொடுத்து வந்தவர் கங்கனா ரனாவத். அவரது டிவிட்டர் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த விழாவுக்காக நேற்றே அயோத்தி வந்து விட்டார் கங்கனா.

பட்டுச் சேலையில், கழுத்து நிறைய நகைககளைப் போட்டு கொண்டு அனுமன் கோவிலில் அவர் துடைப்பத்தால் கோவிலைப் பெருக்கியது பேசுபொருளானது. இந்த நிலையில் இன்றைய விழாவில் உட்காரக் கூட முடியாமல் உற்சாகத்தில் நின்றபடியும், ஜெய்ஸ்ரீராம், சியா ராம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அங்கு வந்த விஐபிக்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பூஜை போட்டு முடித்து, கருவறையில் ராமரின் சிலையின் கண்கள் திறக்கப்பட்டதும், கோவில் மீது ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவினர். இதையெல்லாம் பிரமாண்டத் திரையில் இருந்தடி வெளியில் இருந்தோர் கண்டு களித்தனர். அப்போது கங்கனா மிகவும் உற்சாகப் பெருக்குடன், கைகை மேலே உயர்த்தியபடி அதீத உற்சாகத்துடன் ஜெய் ஸ்ரீராம்  ஜெய் ஸ்ரீராம் என்று விடாமல் முழங்கியபடி காணப்பட்டார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை கங்கனாவும் போட்டுள்ளார். ராமர் வந்து விட்டார் என்று கூறி அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களில் கங்கனா போட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்