சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை!

Nov 01, 2024,10:16 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை :   முருகனுக்குரிய மிக முக்கியமான விரதம் சஷ்டி விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டியை மகா கந்தசஷ்டி என அழைப்பதுண்டு.  இது அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை துவங்கி, சப்தமி வரை ஏழு நாட்கள் இருக்கும் விரதமாகும். 


சஷ்டி விரதம் என்பது யார் வேண்டுமானாலும், என்ன பிரச்சனை தீர வேண்டும் என்றாலும், எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் இருக்கலாம். இருந்தாலும் குழந்தை வரம் வேண்டுபவர்களே இந்த விரதத்தை அதிகமாக இருப்பதுண்டு. சஷ்டி விரதம் இருப்பதில் பல வகைகள் உண்டு. அவற்றுள் மிக கடுமையான விரதமாக கருதப்படுவது மிளகு விரதமாகும். அதாவது முதல் நாளில் 1 மிளகு, 2ம் நாளில் 2 மிளகு, 3ம் நாளில் 3 மிளகு என ஒவ்வொரு நாளுக்கு ஒரு மிளகு என படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வதாகும். சஷ்டியின் கடைசி நாளில் 7 மிளகு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த கடுமையான விரதத்தை இன்றும் பலர் கடைபிடிக்கிறார்கள்.




உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பவர்கள், மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. பெரும்பாலானவர்கள் பால், பழம் அல்லது ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு இவ்விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். உணவு உட்கொண்டு கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மெளன விரதம் இருக்கலாம். அதே போல் விரதம் இருப்பவர்கள் பகலில் உறங்கக் கூடாது.


குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வேலை கிடைக்க வேண்டும், திருமணம் ஆக வேண்டும் என்பவர்கள் சஷ்டி விரதம் இருக்கலாம். வீடு வாங்க வேண்டும், சொத்து பிரச்சனை தீருவதற்கு, நோய் தீர, மற்ற அனைத்து பிரச்சனையில் இருந்து நல்வாழ்வு வாழ கடைபிடிக்கலாம். 


இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 08ம் தேதி, கந்தசஷ்டியின் ஏழாவது நாளில் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 


சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்து வழிபட வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், ஷண்முகக் கவசம், குமாரஸ்துவம் போன்றவற்றை படித்து வழிபடுவது சிறப்பு. முருகன் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகே சஷ்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 


வீட்டில் இருந்து சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும். நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியே இதற்கு சாட்சி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்