- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா நவம்பர் 02ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டியும், காப்பு கட்டாமலும் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்து வருகின்றனர். குறிப்பாக திருச்செந்தூர் திருத்தலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விரதம் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நவம்பர் 08ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியும், முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 08ம் தேதியும் நடைபெற உள்ளது. தற்போது கந்தசஷ்டி விழாவின் நான்கு நாட்கள் கடந்து விட்டன. நாளை கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள். கந்தசஷ்டி விழாவின் மிகவும் அற்புதமான, முக்கியமான திருநாள் இதுவாகும். கந்தசஷ்டியின் ஐந்தாம் நாளில் தான் முருகப் பெருமான் போருக்கு புறப்படுவதற்கு முன் அன்னை பராசக்தியிடம் இருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் அன்னையிடம் வேல் வாங்கும் போது முருகப் பெருமானின் திருமேனியில் வியர்க்கும் அதிசயம் இந்த நாளில் தான் நடைபெறும்.
சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு புறப்படும் முருகப் பெருமானுக்கு அளிப்பதற்காக, உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றாக்கி, அதோடு தன்னுடைய சக்தியையும் இணைத்து வேலாக உருமாற்றினார் சிவ பெருமான். அந்த வேலை அப்படியே பராசக்தியிடம் கொடுத்தார். அன்னை பராசக்தி, அந்த வேலில் தன்னுடைய சக்தியையும் சேர்த்து சக்திவேலாக முருகப் பெருமானிடம் வழங்கினார். அன்னை வழங்கிய சக்திவேலை முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வாங்கியதும் அது வெற்றிவேலாக மாறியது. அந்த வேலைக் கொண்டு மாமரமாக உருமாறிய சூரனின் உடலை இரண்டாக கிழித்து, ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவற் கொடியாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகப் பெருமான்.
கந்தசஷ்டியின் இந்த அற்புதமான ஐந்தாம் நாளில் நாமும் வேலை வழிபட்டு, வேலை போற்றும் மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் முருகனின் அருள் கிடைப்பதுடன், நம்முடைய வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறும்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
கந்தசஷ்டியின் 5ம் நாளில் முருகப் பெருமானின் அருளை பெருவதற்கு இந்த ஒரு வார்த்தை மந்திரத்தை சொன்னாலே போதும்.
ச ர வ ண ப வ
ர வ ண ப வ ச
வ ண ப வ ச ர
ண ப வ ச ர வ
ப வ ச ர வ ண
வ ச ர வ ண ப
இந்த நாளில் வேல் மாறல் படித்து, வேல் பூஜை செய்வது சிறப்பு. வேல்மாறல் பதிகத்தை முழுவதுமாக படிக்க முடியாதவர்கள், " ஓம் முருகா சரணம். வேலும் மயிலும் சேவலும் துணை" என 6 முறை சொல்லி விட்டு,
"திருத்தணியில் உதித்தருளும்
ஒருத்தன்மலை விருத்தன் என
துளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குஹன் வேலே" என்ற வேல்மாறலின் துவக்க அடியை 6 முறை சொன்னாலே போதும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}