ராகுல்ஜி.. அடிச்சு ஆடுங்க.. வாய்மையே வெல்லும்.. கமல்ஹாசன் வாழ்த்து

Aug 08, 2023,11:16 AM IST

சென்னை: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எம்.பி பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதை காங்கிரஸார் நேற்றிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி தனது அனல் உரையை ஆற்றவுள்ளார்.




இந்தப் பின்னணியில் ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீதியை பலி கொடுத்து விட்டு பெரும் அதிகாரம் நீடிக்காது. உண்மையும், நேர்மையும் இருந்தால்தான் அங்கு நீதி தழைத்திருக்கும்.  மக்கள் உரிய முறையில் குரல் எழுப்பும்போது, உரிமையை வலியுறுத்தும்போதும்தான் உண்மை உயிரோடு இருக்கும். 


ராகுல் காந்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்திருக்கிறது. உரிய நேரத்தில் உரியதை அது செய்துள்ளது.


நமது பலத்தை காட்ட மட்டுமே அதிகாரத்தை கையில் எடுத்தால், சாமானியனும் கூடகொதித்தெழுவான், பொங்கி எழுவான். இதை அதிகாரத்திலும், அதிகார பலத்தில் மிதப்போரும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையிலானது நீதி வெல்லும், வென்றே தீரும்.


நாடு முழுக்க சாமானிய மக்களின் கோபம் அதிகரிப்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்திருக்கிறது.. அதனால் தான் அது நீதியை நிலைநாட்டியுள்ளது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்