புதிதாக 1.48 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. வந்தது செம அப்டேட்!

Jun 27, 2024,05:42 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல்  மேல்முறையீடு செய்த 1.48லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயடைந்து வருகின்றனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் புதிதாகக் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்ந்து மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி தமிழ்நாடு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், பயன்பெரும் மகளிர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், சட்டசபையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையினர் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024-2025ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைவு!

news

அமைச்சர் கே.என் நேருவின்..மகன், தம்பி வீடுகளில்.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்