கன மழை காரணமாக மூடப்பட்ட.. கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. இன்று முதல் மீண்டும் திறந்தாச்சு!

Oct 19, 2024,12:02 PM IST

சென்னை:   கனமழை காரணமாக சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று முதல் வழக்கம்போல் அது செயல்படுகிறது.


சென்னை கதீட்ரல் சாலையில் பல ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துவந்த 6.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, ரூ.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக உலகத்தரத்திலான பூங்காவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இந்தப் பூங்காவில் இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை, என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பூங்காவுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா எனப் பெயரிடப்பட்டது. 




கலைஞர் நூற்றாண்டு பூங்கா கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டது. பூங்காவில் கட்டண சலுகை மிக அதிகமாக இருப்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இதனை காண முடியும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.  இதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கன முதல் அதிக கன மழை வரை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வடிய வழிவகை செய்யப்பட்டது.


இந்த கனமழை காரணமாக அக்டோபர் 15 முதல் 18 வரை கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  தறபோது மழை நின்று விட்டதால், கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,  இன்று முதல் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வழக்கம் போல் செயல்படும். இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க   tnhorticulture.in என்ற இணையதளம் வாயிலாக பூங்காவிற்கான நுழைவு கட்டணத்தை பெறலாம் . பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். 


இசை நீரூற்றை பார்வையிட ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்காக நுழைவுச்சீட்டு மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை இணையதளம் வாயிலாக  பெற்றுக்கொள்ளலாம். மாலை 6 மணி வரை மட்டுமே பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்