சென்னை: தமிழக பாஜக சார்பில் 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகங்களை தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.
தமிழக பாஜகவுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அலுவலகம் உள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் உள்ளன. மேலும் சில ஊர்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் கட்சி நிர்வாகிகளின் சொந்த இடங்களில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழக பாஜகவுக்கு என சொந்த கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக 15 மாவட்ட அலுவலகங்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா அடிக்கல் நாட்டினார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான வடிவத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10 கட்டங்கள் இன்று திறக்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி தவிர தருமபுரி, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, விழுப்புரம், தேனி, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நட்டா திறந்து வைத்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}