191 வருஷமாச்சு.. இன்னும் சூப்பராக வலம் வரும் ஜொனாதன்.. உலகின் மிக மிக வயதான விலங்கு!

Dec 11, 2023,05:30 PM IST

விக்டோரியா, செஷல்ஸ்: உலகின் மிக மிக வயதான நில விலங்கு  என்ற சாதனை படைத்துள்ள ஜெனாதன் ஆமைக்கு 191 வயதாகியுள்ளது. இந்த ஆமைதான், நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிக மிக வயதானதாகும். இது கின்னஸ் சாதனையும் கூட.


செஷல்ஸ் தீவில் வசித்து வரும் இந்த ஆமையானது,  1832ம் ஆண்டு பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆமையானது தற்போது செயின்ட் ஹெலினா தீவில் வசித்து வருகிறது. இந்த தீவுக்கு கடந்த 1882ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது இதற்கு வயது 50 ஆகும்.


ஜொனாதன் ஆமை தனது 191வது பிறந்த நாளை கொண்டாடும் படம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  இந்த வகை ஆமைகள் சராசரியாக 150 வருடங்கள் வரை வாழும். ஆனால் அதைத் தாண்டி 191 வருடத்தைத் தொட்டு அதிசயிக்க வைத்துள்ளது ஜொனாதன்.




இதற்கு முன்பு டூயி மலிலா என்ற ஆமை 188 வருடங்கள் வரை வாழ்ந்து மறைந்தது. அதுதான் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்த உயிரினமாக இருந்தது. அந்த சாதனையை ஜொனாதன் 2021ம் ஆண்டு தகர்த்தது. மலிலா ஆமை 1965ம் ஆண்டு மறைந்தது.


ஜொனாதன் ஆமை இந்று வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. ஆனால் அதற்கு நுகரும் தன்மை போய் விட்டது. மேலும் கண்ணிலும் கண் புரை ஏற்பட்டு பார்வையும் ஓரளவு மங்கியுள்ளது. இருப்பினும் அதற்கு நல்ல பசி உணர்வு உள்ளது. சரியான நேரத்தில் சாப்பிடுகிறது. பழங்கள், காய்கறிகளை அதற்கு உணவாக கொடுக்கிறார்கள்.  இதைப் பராமரிப்பதற்காகவே ஒரு டீம் உள்ளது. அவர்கள்தான் ஜொனாதனுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டை கையால் ஊட்டுகிறார்கள். ஜொனாதனுக்குத் தேவையான விட்டமின்கள், தாது உள்ளிட்டவை அடங்கிய உணவு அதற்குக் கொடுக்கப்படுகிறது.




மனிதர்கள் கூட இத்தனை வயது வரை வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் ஜொனாதன் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. கடந்த ஆண்டுதான் ஜொனாதனின் பிறந்த தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது செயின்ட் ஹெலினா தீவு நிர்வாகம். அதன்படி 1932ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் ஜொனாதன் பிறந்த நாளாகும்.


இத்தனை கால வாழ்க்கையில் 8 இங்கிலாந்து ராஜ வம்சத்தை பார்த்து விட்டது ஜொனாதன். 40 அமெரிக்க அதிபர்களைப் பார்த்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜொனாதனுக்கு வெயிலில் காய்வது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதேசமயம், வெயில் ரொம்ப அடித்தால் மெதுவாக நிழலுக்குப் போய் விடும். மற்ற நேரங்களில் பெரும்பாலும் வெயிலில்தான் இருக்குமாம்.  வெயில் நன்றாக உடலில் பட வேண்டும் என்பதற்காக தனது கழுத்தையும், கால்களையும் நன்றாக விரித்து சூப்பராக சன்பாத் எடுக்குமாம் ஜொனாதன்.


ஜொனாதனுக்கு ரொம்பப் பிடிச்சு சாப்பாடு என்றால் முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட், கீரை வகைகள், ஆப்பிள்கள் ஆகியவைதான். அதை விட முக்கியமாக வாழைப்பழம் கொடுத்தால் சூப்பராக சாப்பிடுமாம்.




ம்ம்.. இந்த ஆமைக்கு மட்டும் பேசும் தன்மை இருந்தால் அந்தக் காலத்து  கதைகளை எல்லாம் கதை கதையாக கேட்டிருக்கலாம் இல்லை!

சமீபத்திய செய்திகள்

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

news

சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!

news

தீபாவளி சிறப்பு ரயில்கள்.. சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. அடுத்து பஸ்ஸைப் பிடிக்க வேண்டியதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்