தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள சகி ஒன் ஸ்டாப் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாப்பாளர் (ஆண்) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சகி என்ற பெயரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு மையத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குடும்ப வன்முறை உள்ளிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் சகி ஒன் ஸ்டாப் மையம் தொடங்கப்படும். இந்த மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யப்படும். மேலும் மன நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்த மையம் செய்கிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாவலர்(ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.
சகி ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம், மற்றும் சம்பளம், குறித்த விவரங்களை www.tenkasi.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் tenkasi.nic./forms/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 140 /5B ஸ்ரீ சக்தி நகர், தென்காசி -627811.
இறுதி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.7.2024 அன்று மாலை 5 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}