மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். விரைவில் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான ஆளெடுப்பு தொடர்பாக விளம்பரம் வெளியிடப்படவுள்ளதாகவும் ஜெய்ஷா கூறியுள்ளார்.
ஜூன் மாத்துடன் ராகுல் டிராவிடன் பதவிக்காலம் முடிவடைகிறது. ஜெய்ஷாவின் பேச்சின் மூலம் டிராவிடுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. விரைவில் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் வெளியாகவுள்ளதாம். இந்தியரே தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா அல்லது வெளிநாட்டுக்காரர் யாராவது தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா என்று தெரியவில்லை.
இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார் டிராவிட். 2023 உலகக் கோப்பைப் போட்டியுடன் அவரது கான்டிராக்ட் முடிவடைந்த நிலையில் அது இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அவருக்கு பதவி நீட்டிப்பு தர பிசிசிஐ முடிவு செய்யவில்லை. புதியவரைத் தேர்ந்தெடுக்கும் மன நிலையில் அது உள்ளது.
ஒரு வேளை ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராக விரும்பினால் அவரும் விண்ணப்பிக்கலாம் என்று ஜெய்ஷா கூறியுள்ளார். வெளிநாட்டுப் பயிற்சியாளருக்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்க மறுத்து விட்டார் ஜெய்ஷா. அதை இப்போதே சொல்ல முடியாது என்று அவர் பதிலளித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். கபில்தேவ் - கவாஸ்கர் காலத்துக்குப் பின்னர், கங்குலி, சச்சின் டெண்டுல்கர், டிராவிட் ஆகியோரது காலம்தான் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலமாக விளங்கியது. 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 344 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்களும், ஒரு நாள் போட்டிகளில் 12 சதங்களும் இவர் போட்டுள்ளார். பேட்டிங் தவிர வெகு அரிதாக பந்து வீச்சிலும் ஈடுபட்டுள்ளார். நல்லதொரு விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டவர் டிராவிட்.
இந்திய அணியின் வீரராக இவரது அதிகபட்ச வெற்றி என்பது 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா கோப்பை வென்று சாம்பியன் ஆனதுதான். பயிற்சியாளராக இவரது சாதனை என்பது 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது மற்றும் 2023 ஆசியா கோப்பையை வென்றது ஆகியவை ஆகும். 2023ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதேபோல ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!