கோவை: நிதிச்சுமை காரணமாக ஜெயலலிதா தன்னிடம் ரூ.2 கோடி கட்சி பணத்தை கடனாக கேட்டார் என கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அதே வேளையில், கோவையில் ஆலோசனை கூட்டத்தை ஓபிஎஸ் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதில் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓ.பி.எஸ். பேச்சிலிருந்து...
அதிமுகவின் இத்தனை ஆண்டுகால சரித்திரத்தின் 12 ஆண்டு காலம் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் தான். என்னிடம் ஜெயலலிதா அந்த பொறுப்பை தந்த போது ரூ.2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் கட்சியின் பணம் நான்கு கோடியானது. ஒருநாள் ஜெயலலிதா என்னை அழைத்து எனக்கு தனிப்பட்ட முறையில் பணச்சுமை அதிகமாகிவிட்டது. ஏராளமான வழக்குகளை என்மீது போட்டு இருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பணம் தர வேண்டும் என்று கூறி கட்சி நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் தாருங்கள் என்று கேட்டார்.
உண்மையில் கண்ணீர் விட வேண்டிய நிகழ்வு அது. உடனே நான் ரெண்டு கோடி ரூபாயை வழங்கினேன். அந்த ரெண்டு கோடி ரூபாயை ஒரே மாதத்தில் திருப்பி அளித்தார் ஜெயலலிதா. இதுதான் வரலாறு.
இன்றைக்கு எங்களை எல்லாம் வம்படியாக வெளியேற்றிவிட்டு அவர்கள் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். சாதாரண தொண்டனாக இருந்த ஓபிஎஸ் நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்எல்ஏ வாக இருக்க முடியுமா? அமைச்சர் ஆகியும் இருக்க முடியுமா? முதலமைச்சராக இருக்க முடியுமா? என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}