சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் பற்றி புதிய தகவல் கிளம்பியுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த லைன் படு சுவாரஸ்யமாக இருக்கிறது. நிஜத்தில் இது நடந்தால் வித்தியாசமான படமாக இருக்கும்.
தமிழ் திரைப்படத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். விஜய்க்கு ஒரு மகனும், மகளும் இருப்பது நாம் அறிந்ததே. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மகனுடன் ஆடியிருப்பார். அதேபோல அவரது மகள், தெறி படத்தில் தோன்றியிருப்பார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ தனது தாத்தா வழியில் இயக்குநராகும் கனவில் இருக்கிறார்.
சில ஆண்டுகளாக ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து வந்தார். சமீபத்தில் தனது படிப்பை முடிந்து இந்தியா வந்துள்ளார். மேலும், லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனம் சார்பில் ஒரு படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானத. அதன் பிறகு அது என்ன ஆனது என்று தெரியவில்லை. அப்படியே கிடப்பில் இருக்கிறது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேசன் சஞ்சய் தனது படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுக்க பல்வேறு வளர்ந்து வரும் நாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் லேட்டஸ்டாக துரு விக்ரமுடன் அவர் பேசியுள்ளார். அவர்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார என்றும் கூறப்படுகிறது. துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அடுத்தாக தற்போது மகான் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல ஹீரோயினாக, அதிதி ஷங்கர் நடிக்கலாம் என்று சொல்கிறார்கள். இவர் இயக்குநர் ஷங்கரின் மகள் ஆவார். இசையும் கூட ஒரு வாரிசு தான். அதாவது இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன்தான் இசையமைக்கப் போவதாக சொல்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் களம் காண ஆயத்தமாகி வரும் இந்த வேலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் நுழைய உள்ளது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்
பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!
குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது
மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!
முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி
தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!
BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!
64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!
என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!
{{comments.comment}}