"காந்தி படிக்காதவர்.. சட்டம் படித்தவர் என்பது தவறு".. சொல்கிறார் ஜம்மு காஷ்மீர் கவர்னர்!

Mar 25, 2023,02:13 PM IST
ஸ்ரீநகர்: மகாத்மா காந்தி சட்டம் படித்தவர் என்பது தவறான கருத்தாகும். அவரிடம் எந்த பல்கலைக்கழகத்தின் பட்டமும் இல்லை என்று கூறியுள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.

மேலும், மகாத்மா காந்தியின் ஒரே கல்வித் தகுதி அவர் உயர் நிலைப் பள்ளிப் படிப்பில் தேறியவர் என்பது மட்டுமே என்றும் கூறியுள்ளார் மனோஜ் சின்ஹா. இது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.



குவாலியரில் டாக்டர் ராம் மனோகர் லோகியா நினைவு உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படித் தெரிவித்தார் மனோஜ் சின்ஹா. ஆனால் இதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

மனோஜ் சின்ஹா பேசுகையில், சிலருக்குத்தான் இந்த உண்மை தெரியும். பெரும்பாலானோருக்கு, குறிப்பாக படித்தவர்களுக்கே கூட காந்தி சட்டப்படிப்பு படித்தார் என்ற தவறான தகவல்தான் தெரியும். உண்மையில் காந்தி எந்த பட்டப் படிப்பும் படிக்கவில்லை.  இதை பலர் சர்ச்சையாக பார்க்கலாம். ஆனால் உண்மை இதுதான். நான் உண்மையின் அடிப்படையில்தான் பேசுகிறேன்.

காந்தி உயர் நிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவர். அதுதான் அழரது தகுதி. காந்திஜி படிக்காதவர் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் கிடையாது. ஆனால் அவரிடம் ஒரு சாதாரண பட்டம் கூட இல்லை. எந்தப் பட்டமும் பெறாதவர் அவர். எந்தப் பல்கலைக்கழகத்திலும் படிக்காதவர் அவர். 

உண்மையின் சக்தியால், சுதந்திரத்தை அடைந்தவர் காந்திஜி. அதனால்தான் அவர் தேசத்தின் தந்தையாகவும் மாறினார்.  சட்டம் படிக்காமலேயே அவர் சட்ட நிபுணராக இருந்துள்ளார்.  அந்த அளவுக்கு அறிவாளியாக திகழ்ந்தவர் அவர். அவரது திறமை காரணமாக சட்டம் படிக்காமலேயே அவர் வழக்கறிஞராக பணியாற்றும் தகுதியைப் பெற்றார் என்றார் சின்ஹா.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

news

மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

அதிகம் பார்க்கும் செய்திகள்