கட்சியில் சேருமாறு.. என்னை பாஜக அழைத்தது உண்மை தான்.. கூறுகிறார் திவ்யா சத்யராஜ்

Mar 02, 2024,05:45 PM IST

சென்னை: நான் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. அது பாஜகதான். ஆனால் பாஜகவில் சேர விருப்பமில்லை. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார் திவ்யா சத்யராஜ்.


நடிகர் சத்யராஜின் மகள்தான் திவ்யா சத்யராஜ். இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக வலம் வருகிறார். இவர் மகிழ்மதி என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கும் பணியையும் செய்து வருகிறார்.


இவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று முன்னரே கூறியிருந்தார். இந்நிலையில் இவரை பாஜக அழைத்ததாக ஒரு செய்தி பரவிய நிலையில், அதற்கு திவ்யா சத்யராஜ் விளக்கம் கூறியுள்ளார். இது குறித்து ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என பல முறை கூறியிருக்கிறேன். உடனே நீங்கள் எம்.பி. ஆக வேண்டும் என அரசியலுக்கு வருகிறீர்களா? அமைச்சர் பதவிக்கு ஆசை உண்டா? உங்கள் அப்பா பிரச்சாரம் செய்வாரா?  என பல கேள்விகள் வந்தன. 




நான் பதவிக்காகவோ தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அரசியலுக்கும் வரவில்லை. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் களப்பணி செய்ய வேண்டும் என்று ஆசையில் தான் அரசியலுக்கு வர நினைக்கின்றேன்.  ஏற்கனவே களப்பணிகள் செய்து வருகின்றேன். மகிழ்மதி என்ற இயக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகின்றேன். 


நான் தனி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. பிஜேபியில் சேர விருப்பமில்லை. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன். நான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் எனது அப்பா பக்க பலமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்