கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் நேற்றும் இன்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை இன்றி காணப்பட்டது. இந்நிலையில், நேற்றும் இன்று மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக நேற்று பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால், அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தனர். தொடர்ந்து மாலையில் மேகமூட்டமும், விட்டுவிட்டு சாரல் மழையும் பெய்தது. ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் குடையை பிடித்துக் கொண்டு சைக்களிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இன்று கொடைக்கானல் பகுதியில் மதியத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. மன்னவனூர், பேரிஜம், கூக்கால், செண்பகனூர், நாயுடுபுரம்,வட்டசோலை, பிரகாசபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று பள்ளிகள் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இருப்பினும் கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் ப்ரீயாக பயணம் செய்வதாக தெரிவித்திருந்தனர்.
தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொடைக்கானல் முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அவை சிறிது சிறிதாக வடியவும் ஆரம்பித்துள்ளது. மேக கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ரம்மியமான சூழலில் கொடைக்கானல் காணப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}