2 செயற்கைகோள்கள் இணைப்பு வெற்றி.. அசத்திய இஸ்ரோ.. விண்வெளியில் வரலாறு படைத்த இந்தியா!

Jan 16, 2025,04:46 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்ட SpaDex திட்டத்தின் கீழான 2 செய்கைகோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் செயற்கை கோள் அல்லது விண்கலங்களை இணைக்கும் 4வது நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.


அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் 2 செயற்கைகோள்களை இணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டு அதற்கான ஆய்வில் தீவிரமாக இறங்கியது.  இதன் தொடர்ச்சியாக, ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்சி சி-60 என்ற ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த முயற்சி கடந்த வாரமே செயல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இணைப்புத் திட்டம் தள்ளிப்போனது.




கடந்த ஜனவரி 7ம் தேதி விண்ணில் இணையச்செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்ட நிலையில், (இன்று) ஜனவரி 16ம் தேதி இரண்டு செயற்கைகோள்களையும் விண்ணில் இணைக்கும் டாக்கிங் செயல்முறை செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இஸ்ரேல் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 


இது குறித்து இஸ்ரோ எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா  சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கையானது, எதிர்காலத்தில் விண்வெளியில் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும் என்பது முக்கியமானது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இப்பவே தலை தூக்கும் வெயில்.. இன்றும், நாளையும் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு

news

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் அதிரடி கைது!

news

திருப்பரங்குன்றத்தை வைத்து.. திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்கிறது பாஜக.. அமைச்சர் சேகர்பாபு

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

news

படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

news

ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்