டெஹரான்: ஈராக்கிலிருந்து செயல்பட்டு வரும் இஸ்ரேல் மையத்தை ஏவுகணை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இது இஸ்ரேலின் உளவு தலைமை அலுவலகம் என்று ஈரான் கூறியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளைக் குறி வைத்து ஈரான் பலமுனை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் ஈராக்கில் உள்ள இஸ்ரேல் மையம் முற்றிலும் தகர்ந்து தரைமட்டமானதாக தகவல்கள் கூறுகின்றன. குர்திஸ்தான் தலைநகரான அர்பில் நகரில் இந்த தலைமை அலுவலகம் அமைந்திருந்தது. இங்கிருந்தபடி, ஈரானுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை இஸ்ரேல் செய்து வந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதல் நடந்த சமயத்தில் அங்கிருந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் படுகாயமடைந்ததாக குர்திஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரது பெயர் பெஷ்ரா டிசாயி. இவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.
இதேபோல சிரியாவிலும் சில நிலைகளை குறி வைத்து ஈரான் படையினர் தாக்கியுள்ளனர். ஈரானுக்கு எதிரான தீவிரவாதிகளின் தளங்கள் இவை என்று ஈரான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தீவிரவாதிகள்தான் சமீபத்தில் ஈரானின் கெர்மான் மற்றும் ரஸ்க் ஆகிய நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஈராக்கின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் செயல் இது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்
தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!
சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?
சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!
தீபாவளி சிறப்பு ரயில்கள்.. சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. அடுத்து பஸ்ஸைப் பிடிக்க வேண்டியதுதான்!
தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை.. கடைப் பக்கம் போகவே பயமா இருக்கேப்பா!
ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் (சிறுகதை)
வங்கக்கடலில் உருவானது.. டாணா புயல்.. நாளை அதி தீவிர புயலாக மாறும்..!
மேலடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில்.. இன்று கன மழை பெய்ய வாய்ப்பு
{{comments.comment}}