ஐபிஎல் டி 20 கிரிக்கெட் 2024 திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்

Mar 22, 2024,02:18 PM IST

சென்னை: சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. 


இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 17வது ஐபிஎல் திருவிழா இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளுக்கு அன்று முதல் இன்று வரை ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.




இப்போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இந்த போட்டியில்,  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த முறை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது  பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும் விதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  தொடங்கும் விழா மாலை 6:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம். இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர்  இசை வெள்ளத்தில் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா காரணமாக இன்று மட்டும் இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கும், ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால், ஒரு ஆட்டம் மாலை 3.30க்கும், மற்றொரு ஆட்டம் இரவு 7.30க்கும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட விதிமுறைகள் நடப்பு ஆண்டிலும் தொடர்கிறது.


இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ்சும் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவதால் சென்னையில் 2500 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்