சென்னை: 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸுடன் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது. தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டி நடைபெறும். முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் சந்திக்கவுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை முதல் போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறும். முதல் போட்டியிலேயே பரம வைரியான மும்பை இந்தியன்ஸை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ளவுள்ள சுற்றுப் போட்டிகள் விவரம்:
மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)
மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ((சென்னை)
மார்ச் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (குவஹாத்தி)
ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி கேப்பிடல்ஸ் (சென்னை)
ஏப்ரல் 8 - சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் (முல்லான்பூர்)
ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)
ஏப்ரல் 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (லக்னோ)
ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (மும்பை)
ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (சென்னை)
ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் (சென்னை)
மே 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பெங்களூரு)
மே 7 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா)
மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)
மே 18 - சென்னை சூப்பர் கிங்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்)
மே 18ம் தேதியுடன் சுற்றுப் போட்டிகள் முடிவடையும். மே் 20ம் தேதி குவாலிபயர் 1 போட்டி ஹைதராபாத்தில் நடைபெறும். எலிமினேட்டர் போட்டி அதே ஹைதராபாத்தில், மே 23ம் தேதி நடைபெறும். குவாலிபயர் 2 போட்டியும், இறுதிப் போட்டியும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன. குவாலிபயர் 2 போட்டி மே 23ம் தேதியும், இறுதிப் போட்டி 25ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சாம்பியன்கள்
2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 சாம்பியன்கள் உருவாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 பட்டங்களை வென்றுள்ளன. இதற்கு அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை சாம்பியனாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன. நடப்புச் சாம்பியனாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரன்னர் அப் ஆகியுள்ளது. இந்த முறை சாம்பியன் ஆகப் போகும் அணி என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியும் விளையாடுகிறார் என்பதால் ஐபிஎல் தொடர் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு.. முதல் முறை எம்.எல்.ஏ.. டெல்லியின் 4வது பெண் முதல்வராகிறார்!
சாம்பியன்ஸ் டிராபி போட்டின்னு வந்துட்டா.. விராட் கோலிக்கு லட்டு மாதிரி.. என்னா ஆட்டம் பாருங்க!
பிப்.25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் மது, போதைப் பொருட்கள்தான்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன.. நடவடிக்கை எடுங்க.. டாக்டர் அன்புமணி கோரிக்கை
காலைல 3 மணி இருக்கும்.. சேவல் கொக்கரக்கோன்னு கூவிருது.. கோர்ட்டுக்குப் போன அடூர் ராதாகிருஷ்ணன்!
வடிவேலு போட்டோவை ஷேர் செய்த பார்த்திபன்.. மீண்டும் கூட்டணியா.. பழைய பூங்காற்று திரும்புமா?
வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனிதர்களை மட்டுமல்லாமல்.. ஆடு மாடுகளையும் கடிக்கும் வெறிநாய்கள்.. சீமான் முக்கிய கோரிக்கை!
{{comments.comment}}