டெல்லி: 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அக்டோபர் 1ம் தேதி எழுதியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விளையாட்டு திருவிழா தான் ஒலிம்பிக். இந்த ஒலிம்பிக் விளையாட்டில் உலகளவில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விளையாட்டு போட்டியை தங்கள் நாடுகளில் தான் நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டினரும் போட்டு போடுவது வழக்கம். இந்த போட்டியினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் கிடைக்கும். அத்துடன் இது நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 1ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் பட்சத்தில், போட்டிகள் அனைத்தும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!
{{comments.comment}}