ஜகார்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த படிக் ஏர் - Batik Air - விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் பைலட்டுகள், விமானத்தை பறக்க விட்டு விட்டு, அரை மணி நேரம் ஹாயாக தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த பரபரப்பு தகவலை கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பைலட் தூங்கினால் கோ பைலட் விழித்திருக்க வேண்டும். கோ பைலட் தூங்குவதாக இருந்தால் பைலட் விழித்திருக்க வேண்டும். இதுதான் விதி. ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தூங்கியுள்ளனர். இதனால் விமானத்தில் இருந்த 153 பேரின் உயிரும் பெரும் ரிஸ்க்கில் இருந்துள்ளது. ஏதாவது ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் கூட மிகப் பெரிய அசம்பாவிதத்தில் போய் அது முடிந்திருக்கும்.
சம்பந்தப்பட்ட விமானமானது, தென் கிழக்கு சுலவேசியிலிருந்து ஜகார்தாவுக்கு போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் இந்த தூக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. நல்ல வேளையாக விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானிகள் இருவரும் நேரில் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளனர். அதேபோல படிக் ஏர் நிறுவனத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்களுக்கு போதிய ஓய்வளிப்பதை படிக் ஏர் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு பைலட்டும், கோ பைலட்டும் ஓடும் விமானத்தில் தூங்கியதாக தெரிய வந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}