மும்பை: டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்டிக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுலுக்கு அணியில் இடமில்லை. அஸ்வின் உள்பட எந்த தமிழ்நாட்டு வீரருக்கும் அணியில் இடம் தரப்படவில்லை.
டி20 உலகக் கோப்பைத் தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இணைந்து நடைபெறவுள்ளன. மொத்தம் 20 அணிகள் இதில் விளையாடவுள்ளன. நான்கு குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா ஏ குரூப்பில் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்ட்யா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பந்த், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷதீப் சிங், முகம்மது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.
ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.
இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கே. நடராஜன், அஸ்வின் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல ஷாருக் கான் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரரர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை. இருந்த ஒரே வீரரான கே.எல். ராகுலையும் கூட சேர்க்காமல் விட்டுள்ளனர். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஜூன் 5ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை நியூயார்க்கில் சந்திக்கவுள்ளது. அதன் பிறகு அதே மைதானத்தில் ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதும். இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெறவுள்ளன. அமெரிக்காவுடன் ஜூன் 12 மற்றும் கனடாவுடன் ஜூன் 15 தேதிகளில் இந்தியா மோதவுள்ளது.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!