மும்பை: சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் வர்த்தக விடுமுறைக்கு பிறகு பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியுள்ள நிலையில் பங்கு வர்த்தகம் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகளின் விலை உயர்வே வர்த்தக உயர்விற்கு முதன்மை காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து திட்டங்களைப் பெறுவது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியைக் குறைந்தது மூலம் புதிய வர்த்தகம் வருவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையின் முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளுடன் இன்றைய வர்த்தகம் புதிய உயர்வுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 95.95 புள்ளிகள் உயர்ந்து 23,561 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 309 புள்ளிகள் உயர்ந்து 77,302 புள்ளிகளை கடந்தது வர்த்தகம்.
அமெரிக்கப் பங்குச்சந்தையின் சாதனை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை தொட்டு வருகிறது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
மறுபக்கம், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}