லண்டன்: லண்டனில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேன்ட்ஸ், சான்ட்வெல் பகுதியைச் சேர்ந்தவர் முகான் சிங். 39 வயதாகும் இவர் கடந்த 2021ம் ஆண்டு பிர்மிங்காமிலிருந்து லண்டன் வந்த ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
இதையடுத்து அந்தப் பெண் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன் பேரில் லீமிங்டன் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது போலீஸார் முகான் சிங்கைக் கைது செய்தனர். அவர் மீது பின்னர் வார்விக் கிரவுன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 வருடங்கள் அவரைக் கண்காணிப்புப் பட்டியலிலும் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}