காபிக் கடையில் சண்டை.. கனடா நாட்டவரை குத்திக் கொன்ற இந்தியர்!

Mar 29, 2023,09:39 AM IST
வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த ஒரு வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த இந்திய இளைஞர், கனடா நாட்டுக்காரரை குத்திக் கொன்று விட்டார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வான்கூவரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கபேக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் பெயர் இந்தர்தீப் சிங் கோசல். 37 வயதாகும் அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவரால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பால்ஸ்டான்லி ஸ்மித். இவருக்கும் 37 வயதுதான்.



ஸ்டார்பக்ஸ் கடைக்கு வெளியே இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. முதலில் வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் இது அடிதடியாக மாறியது.  இதில் படுகாயமடைந்த ஸ்மித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்மித்தின் தாயார் கேத்தி கூறுகையில், எனது மகன் தனது மனைவி, மகளுடன் கடைக்குப் போயிருந்தான். அவனுக்கு தனது மனைவி, குழந்தைதான் உலகமே.. அவர்களுக்காகத்தான் வாழ்ந்து வந்தான். அவனது கொலை மூலம் மொத்த வாழ்க்கையையும் கோசல் சீர்குலைத்து விட்டார் என்றார் வேதனையுடன்.

கோசலுக்கும், ஸ்மித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்செயலானது என்றும், துரதிர்ஷ்டவசமாக இது கொலையில் போய் முடிந்து விட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்