"ஆஸ்திரேலியாவை வச்சுச் செய்யணும்".. ரிக்கி பான்ட்டிங் வீடியோவை ரவுண்டில் விடும் ரசிகர்கள்!

Nov 18, 2023,11:26 AM IST

சென்னை: ஆஸ்திரேலியாவை எப்படி வச்ச செய்யப் போகிறது என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதப் போகின்றன. இதை கிட்டத்தட்ட ஒரு போர் போலவே தீவிர இந்திய ரசிகர்கள் பார்க்கிறார்கள்.  இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் இது போர்தான் என்றே டிக்ளேர் செய்திருப்பார்கள்.. ஆனால் ஆஸ்திரேலியாவை வெல்வதையும் கூட இந்தியர்கள் எப்போதுமே கெத்தாகத்தான் பார்ப்பார்கள்.


காரணம், பாகிஸ்தான் நமக்கு பரம்பரை எதிரி என்றால், ஆஸ்திரேலியா நமக்கு இனவெறி எதிரி. ஆஸ்திரேலியர்கள், எதிரணியினரை எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்வார்கள் என்பது உலகம் அறிந்தது. அதிலும் நடப்பு உலக்க கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திப்பது மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை வெல்வதை ரொம்ப ஸ்பெஷலாக இந்தியா பார்க்கிறது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.




2006ம் ஆண்டு இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது. அப்போது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் சரத் பவார். ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்தவர் சரத் பவார்.


வெற்றிக் கோப்பையை சரத் பவார் வழங்கினார். சரத் பவார் கோப்பையை வழங்கும்போது அவரை ஆஸ்திரேலிய அணியினர் அவமதித்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சரத் பவார் நின்றிருந்தபோது, அவரது முதுகில் தட்டி, அவரை நோக்கி விரலைச் சுண்டி கோப்பையைத் தருமாறு முதலில் ரிக்கி பான்டிங் கூறினார். இது சரத் பவாரை அதிர்ச்சி அடைய வைத்தது. அத்தோடு நிற்கவில்லை, பிற வீரர்கள், சரத் பவார் முதுகில் வைத்து வெளியே போங்கள் என்று தள்ளினர். இதுவும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.


இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர் இந்திய ரசிகர்கள். ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க இதுதான் சரியான வாய்ப்பு. இப்படி ஒரு அவமதிப்பு மீண்டும் இந்தியாவுக்கு நேராமல் தடுக்க ஆஸ்திரேலியாவை படு தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று பலரும் ஆவேசமாக குரல் எழுப்பி வருகின்றனர். 


இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தானை வீழ்த்தினால் அதைத் திருவிழா போல கொண்டாடுவார்கள். அதே உணர்வைத்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்போதும் இந்தியர்கள் கொண்டாடுவார்கள். அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எப்படி வச்சு செய்யப் போகிறது என்பதை காண இப்போதே ஆவலுடன் தயாராகி விட்டார்கள் ரசிகர்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்