நவி மும்பை: இந்தியா - இங்கிலாந்து இடையிலான மகளிர் டெஸ்ட் போட்டியில் 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நவி மும்பையில் நடந்தது. டிசம்பர் 14ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. இதற்குக் காரணம் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பட்டையைக் கிளப்பியதுதான்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 428 ரன்களைக் குவித்தது. சுபா சதீஷ் 69, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48, ஹர்மன்ப்ரீத் கெளர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி சர்மா 67, ஸ்னேஹா ராணா 30 என அசத்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணிக்கு தீப்தி சர்மா எமனாக மாறினார். தனது அபார பந்து வீச்சால் 5 விக்கெட்களைச் சாய்த்தார் தீப்தி. இதனால் இங்கிலாந்து 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாலோ ஆன் கொடுக்க விரும்பாத இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து 479 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் சேஸிங்கைத் தொடங்கியது இங்கிலாந்து.
இந்த முறையும் தீப்தி சர்மா புயுலாக புகுந்து ஆட்டையைக் கலைத்து விட்டார். அபாரமாக பந்து வீசிய தீப்தி சர்மா 4 விக்கெட்களைச் சாய்க்க, 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இந்த ஆட்டம் முழுவதுமே இந்திய வீராங்கனைகளின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. எந்த ஒரு நிலையிலும் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
347 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது இந்தியா. தீப்தி சர்மா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்களைச் சாய்த்தார். அவரே போட்டியின் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய வித்தியாசத்தில் ஒரு அணியைத் தோற்கடிப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}