காத்மாண்டு: இந்தியாவிலிருந்து சென்ற பஸ் நேபாள நாட்டில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தப் பேருந்தில் 40 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. நேபாள நாட்டின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மார்சியாங்கிடி ஆற்றைக் கடக்க முயன்றபோது பஸ் ஆற்றுக்குள் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தப் பேருந்தானது காத்மாண்டுவிலிருந்து பொக்காரா நகருக்குப் போய்க் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பேருந்தின் பதிவு எண் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இப்படித்தான் கடந்த மாதம் நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் நடந்த பெரும் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் 2 பஸ்கள் கவிழ்ந்தன. அந்த விபத்தில் 5 இந்தியர்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}