டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள ஊடுறுவி, தீவிரவாத செயல்களைச் செய்து விட்டு தப்ப நினைத்தால் அவர்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சிஎன்என் நியூஸ் 18 சானலுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராஜ்நாத் சிங். இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப யார் நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். பாகிஸ்தானுக்குள் அவர்கள் ஓடித் தப்ப நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம்.. உள்ளே புகுந்து அவர்களைக் கொல்வோம்.
அண்டை நாடுகளுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்துக் கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது தேவையில்லாமல் நம்மை சீண்டினால் நாமும் சும்மா இருக்க முடிாது. இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை செய்து விட்டு தப்பிப் போய் விடலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம் என்றார் அவர்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குத் நடத்தியதில் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}