இது வேற லெவல் கொண்டாட்டம்.. சென்னை மெரீனா பீச்சில்.. உலகக் கோப்பை பைனல்ஸ் லைவ்!

Nov 19, 2023,10:38 AM IST

சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்களுக்கு பிரமாண்டத் திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் கண்டு களிக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது. 

நாட்டின் பல்வேறு  பகுதிகளிலும் போட்டியை கண்டு களிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.




மெட்ரோ ரயில் நிலையங்களில் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஊர்களில் பொது இடங்களில் பிரமாண்டத் திரை கட்டி அதில் போட்டியை ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.


அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சென்னையில் சூப்பரான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதைக்கு அருகே 28 அடி அகலம் 10 அடி உயரத்தில் பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.


இந்த இடத்திற்கு அருகே மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் போட்டியைக்  கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக  டாய்லெட் வாகனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போட்டியைக்  கண்டு களிக்க மாநகராட்சி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.


தற்போது கடல் காற்று அதிகம் வீசுவதால் திரைக்குப் பாதிப்பு வருமா என்ற அச்சம் உள்ளது. இருப்பினும் பலத்த காற்றுக்கும் கிழிந்து விடாத வகையில்தான் திரை அமைக்கப்படுகிறது. எனவே போட்டியை முழுமையாக கண்டு ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்