இது லிஸ்ட்டுலேயே இல்லையே.. எலான் மஸ்க் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் இந்திய சாட்டிலைட்!

Jan 03, 2024,04:10 PM IST

டெல்லி:  இஸ்ரோ வெளிநாட்டு ராக்கெட் மூலம் தனது செயற்கைக் கோளை செலுத்தி ரொம்ப காலமாகி விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக தனது செயற்கைக் கோள் ஒன்றை அமெரிக்க ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது இந்தியா.


வழக்கமாக பிரெஞ்சு ராக்கெட்டுகளைத்தான் இந்தியா பயன்படுத்தும். ஆனால் தற்போது அமெரிக்க ராக்கெட்டை நாடியுள்ளது. அதுவும், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோளை இந்தியா செலுத்தவுள்ளது.


இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக் கோளை, பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தவுள்ளது. இதுவரை பால்கன் ராக்கெட் மூலம் இந்தியா எந்த செயற்கைக் கோளையும் இதுவரை செலுத்தியதில்லை. இதுதான் முதல் முறையாகும்.




மிகப் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் அளவிலான ராக்கெட் நம்மிடம் இல்லை. அது இன்னும் ஒரு பெரிய குறையாகவே உள்ளது. வேறு எந்த ராக்கெட்டும் தயார் நிலையில் இல்லாததால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை அணுக வேண்டியதாகி விட்டது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். வழக்கமாக பிரான்ஸ் நாட்டு ராக்கெட்டுகளைத்தான், மிகப் பெரிய செயற்கைக்கோள்களை ஏவ இந்தியா நாடும் என்பது நினைவிருக்கலாம்.


இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனமும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. விரைவில் புளோரிடாவிலிருந்து பால்கன் ராக்கெட் மூலம், ஜிசாட் 20 விண்ணில் செலுத்தப்படும்.


ஜிசாட் 20 செயற்கைக் கோள் மிகவும் எடை கொண்டது. அதாவது 4700 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் தகவல் தொடர்பு துல்லியத்தை மேலும் அதி நவீனப்படுத்த இது உதவும்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்