டெல்லி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்னி ரக ஏவுகணை ஒன்றை ஏவிப் பரிசோதித்துள்ளது இந்தியா. இன்று அக்னி 5 எம்ஐஆர்வி ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடந்த 10 வருடமாக மத்திய அரசின் டிஆர்டிஓ அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை சோதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், "மிஷன் திவ்யாஸ்திரா" திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
அக்னி 5 ஏவுகணையானது, Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) technology என்ற புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே ஏவுகணையில் பல்வேறு விதமான (அணு ஆயுதம் உள்ளிட்ட) ஆயுதங்களைப் பொருத்தி பல்வேறு இலக்குகளைத் தாக்க முடியும். சிம்பிளாக சொல்வதானால்.. ஒரே ஏவுகணையை வைத்து எதிரிகளின் பல இலக்குகளை எளிதாக காக்க முடியும்.
இன்னொரு விஷயம், இந்தியா உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பத்தில் முழுக்க முழுக்க நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட சென்சார் உள்ளிட்ட சாதனங்களே பொருத்தப்பட்டுள்ளன என்பது முக்கியமானது. இன்றைய சோதனை திட்டமிட்டபடி இருந்ததாகவும், இது வெற்றி பெற்றதாகவும் டிஆர்டிஓ அறிவித்துள்ளது.
யார் யாரிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது?
இப்படிப்பட்ட ஏவுகணைகள் மிகச் சொற்பமான நாடுகளிடம்தான் உள்ளன என்பது முக்கியமானது. குறிப்பாக நம்முடைய பிராந்தியத்தில் சீனாவிடம் மட்டும்தான் உள்ளது. பாகிஸ்தானிடம் கிடையாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சிடம் அவர்களது நீர்மூழ்கி மூலம் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது.
சீனாவிடம், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. ரஷ்யாவிடம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகள் என இரண்டு வகை ஏவுகணைகளிலும் இந்த வசதி உள்ளது.
பாகிஸ்தான் இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வருவதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}