"இது வரலாறு படைத்த வெற்றி.. 577 டெஸ்ட்டுகளில் காணாத வெற்றி.. பிரமாத வெற்றி".. இந்தியா அபாரம்!

Feb 18, 2024,07:57 PM IST

ராஜ்கோட்: இங்கிலாந்து அணியை புரட்டிப் போட்டு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது இந்தியா. ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை ஈட்டியுள்ளது.


யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதம், ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சு உள்ளிட்டவை இந்தியாவின் வெற்றிக்கு அடிகோலின. 3வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து விட்டது.




இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் தனது இரட்டை சத்தைப் பூர்த்தி செய்தார். மறுபக்கம் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை ஜடேஜா நையப்புடைத்து விட்டார். இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு சுருண்டு போனது. முன்னதாக 557 ரன்கள் என்ற இலக்கை குறி வைத்து இங்கிலாந்து ஆடி வந்தது.


5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்ல முடியும்.


டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்களுக்கு மேற்பட்ட ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா இதுவரை 577 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த டெஸ்ட் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய வெற்றியும் கூட.




மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 2021ம் ஆண்டு வாங்கடே ஸ்டேடியத்தில் வைத்து நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்திருந்தது. அதன் பிறகு இப்போதுதான் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.


ஜெய்ஸ்வால் 236 பந்துகளைச் சந்தித்து 214 ரன்களைக் குவித்திருந்தார்.  மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் 12 சிக்ஸர்களை விளாசியிருந்தார். 


இந்திய பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். 

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்