Operation Ajay: இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடக்கம்

Oct 12, 2023,10:00 AM IST

டெல்லி: இஸ்ரேல் -ஹமாஸ் போருக்கு மத்தியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.


இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் தீவிரமாகியுளளது. இஸ்ரேல் முழு அளவில் போரில் இறங்கியுள்ளது. காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. உயிரிழப்பைப் பற்றி அது கவலைப்படவில்லை. மாறாக, காஸாவை நிர்மூலமாக்கி அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. ஹமாஸை பூமியிலேயே இல்லாத அளவுக்கு அழித்தொழிப்போம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.




இஸ்ரேலின் இந்த போர் வேகத்தில் சிக்கி ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். ஹமாஸுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்காததால் அந்த அமைப்பினர் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்த மீட்புப்  பணியை இந்தியா தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை இந்தியா ஆயத்த நிலையில் வைத்துள்ளது. பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பித்திருப்போரின் முதல் பிரிவினர் இன்று சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்திருப்போருக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்