ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமான வெற்றியை பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே ராஞ்சியில் நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. சுப்மன் கில் மற்றும் ஜுரல் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஆடி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று விட்டது. முன்னதாக 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்களான துருவ் ஜூரல் மற்றும் கில் ஆகியோர் அபாரமாக ஆடி அணியை வெற்றிக் கோட்டைத் தொட வைத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 52 ரன்களும், ஜுரல் 39 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பாசிர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் புயலாக மாறி பந்து வீசவே அந்த அணி 15 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு சேசிங் ஈஸியானது. இந்தியா தனது சேசிங்கை 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிகரமாக முடித்தது.
துருவ் ஜூரல் மேன் ஆப் தி மேட்ச்
ராஞ்சி டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரலுக்குக் கிடைத்துள்ளது. இது அவருக்கு 2வது டெஸ்ட் போட்டியாகும். இதில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களைக் குவித்திருந்தார் ஜூரல். 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை எடுத்திருந்தார்.
தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற ஜூரலுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன. அடுத்த எம்.எஸ். தோனி இவர்தான் என்று ஏற்கனவே சுனில் கவாஸ்கரும் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!
{{comments.comment}}