டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதல் முறையாக முழு அளவிலான கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் 3 டிவென்டி 20 போட்டிகளில் மோதவுள்ளன. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
ஜனவரி 11ம் தேதி மொஹாலி மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும். 14ம் தேதி இந்தூரில் 2வது போட்டியும், ஜனவரி 17ம் தேதி பெங்களூருவில் 3வது போட்டியும் நடைபெறும்.
நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளை பந்தாடியது. இங்கிலாந்தை அது வீழ்த்திய விதம் அனைவரையும் அதிர வைத்தது. உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றிகளைப் பெற்று 6வது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், இந்தியாவுக்கு டஃப் தரும் வகையில் ஆப்கானிஸ்தான் கண்டிப்பாக ஆட முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
{{comments.comment}}