கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி.. பின் விடுவித்த வருமான வரித்துறை.. அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Feb 16, 2024,05:46 PM IST

டெல்லி:  காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வங்கிக் கணக்குகள் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


முன்னதாக கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறுகையில், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.  வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வருமான வரிக் கணக்கு கட்டத் தாமதானதாக கூறி ரூ.210 கோடி அபராதம் விதித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்




இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. கட்சியின் தேர்தல் தயார் நிலையை சீர்குலைக்கும் நடவடிக்கை. இந்தியாவில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. ஒரு கட்சி ஆட்சி முறை நடப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. நீதித்துறையிடமும், மக்களிடமும், ஊடகங்களிடமும் நாங்கள் நீதி கேட்கிறோம் என்று கூறியிருந்தார் மேக்கான்.


கணக்கை முடக்கி வைத்ததற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.  மேலும் வருமான வரித்துறை குறை தீர்ப்பு ஆயத்திடமும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கொண்டு சென்றது.  அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன.


மொத்தம் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் காசோலைகளை ஏற்க வேண்டாம் என்றும் வங்கிககளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வங்கிக் கணக்குகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.


கடந்த 2018-2019ம் ஆண்டில் வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், 45 நாள் தாமதத்திற்காக  நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயக விரோதமானது, மிகத் தீவிரமானது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதில்லை என்றும் அஜய் மேக்கான் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்