விடாமல் வெளுக்கும் மழை.. நனைந்து நடுங்கும் தென் மாவட்டங்கள்.. பள்ளிகளுக்கு லீவு.. மாணவர்கள் ஹேப்பி!

Nov 09, 2023,12:11 PM IST

சென்னை: வட கிழக்கு பருமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதனால் தமிழகத்தின் பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு வட கிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.


குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் சூப்பர் மழை பெய்து வருகிறது. முதலில் தேனியை வெளுத்தெடுத்த கன மழை பின்னர் மதுரைக்கு ஷிப்ட் ஆனது. அப்படியே கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல் என மாறி மாறி கன மழை கொட்டித் தீர்த்துக் கொண்டுள்ளது.




மதுரை, கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.


மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  நேற்று இரவில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் நகரில் உள்ள சாலைகளில் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா  அறிவித்துள்ளார். இந்த விடுமுறையால் பள்ளி குழந்தைகள் படு ஜாலியாகிவிட்டனர்.


இன்றும் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்