கக்கூஸ்ல கதவே இல்லை.. ஜெயிலில் சுத்தமே இல்லை.. புலம்பும் இம்ரான் கான்!

Aug 10, 2023,10:44 AM IST

இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் சுத்தமே இல்லை என இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு அளித்து புகார் தெரிவித்துள்ளார்.


பிரதமர் பதவி வகித்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் விற்று காசாக்கி தானே வைத்துக் கொண்ட வழக்கில், வழக்கில் ஆகஸ்ட் 05 ம் தேதி இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் குற்றவியல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 


தீர்ப்பு வெளியாகி சில நிமிடங்களிலேயே லாகூர் உள்ள அவரது வீட்டில் வைத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அடோக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் நேற்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 





அந்த மனுவில், சிறையில் இம்ரான் கானுக்கு பயங்கரவாதிகள் அடைக்கப்படும் சி கிளாஸ் அறை தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கதவு, ஜன்னல் எதுவும் இல்லாத திறந்த கழிவறை தான் உள்ளது. காலை, மாலை என எந்த நேரமும் கொசுக்கள் மற்றும் எறும்புகள் தொல்லை உள்ளது. சிறையில் கொஞ்சம் கூட சுத்தமே இல்லை. துர்நாற்றம், தூசு தான் உள்ளது.


இம்ரான் கானுக்கு டாக்டர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட யாரையும் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் அவருக்கு வழங்கப்படும் உணவில் எந்த பிரச்சனையும் கிடையாது. சிறையில் சிறிதாக 99 சதுரடி மட்டுமே இட வசதி உள்ளதால் அவரால் பிரார்த்தனை கூட செய்ய முடியவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கானின் வழக்கறிஞர், ஒரு முன்னாள் பிரதமர் இப்படி அடிமையை போல் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்