என்னது.. இம்ரான் கான் கல்யாணமே செல்லாதா?.. இதுக்கும் 7 ஆண்டு சிறை.. அடக் கொடுமையே!

Feb 04, 2024,07:04 AM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது திருமணமும் சட்டத்திற்கு புறம்பானது என சொல்லி, இதற்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீதும், அவரது மனைவி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பாகிஸ்தான் கோர்ட் அடுத்தடுத்து தீர்ப்பு வழங்கி வருகிறது. 71 வயதாகும் இம்ரான் கான் தற்போது சிறையில் இருந்து வருகிறார். 




நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தான் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருட்களை விற்றதாக இவரது மனைவி மற்றும் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா கானின் திருமணம் செல்லாது என்றும், திருமண சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கும், அவரது மனைவிக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. புஷ்ரா கான், இஸ்லாம் திருமண சட்டத்தின் படி முதல் கணவருடனான விவகாரத்து காலம் முடிவதற்கு முன்பாகவே இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ரகசியமான முறையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக முதல் முறையாக பதவியேற்பதற்கு 7 மாதங்களுக்கு முன்பு தான் இம்ரான் கான் - புஷ்ரா கானின் திருமணம் நடந்துள்ளது.


திருமண சட்டத்தை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டது. முதலில் இதை மறுத்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, பிறகு சட்ட விரோதமாகவே இவர்களின் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக் கொண்டது. ஆனால் தாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என இம்ரான் கானும் அவரது மனைவியும் மறுத்து வருகின்றனர். 


பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் இம்ரான் தேர்தலில் போட்டியிட தடை, அடுத்தடுத்த வழக்குகளில் தண்டனை என விதிக்கப்பட்டு வருவது தேர்தலில் அவரது கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான் கான் தற்போது ராவல்பெண்டியில் உள்ள கர்ரிசன் நகர சிலையில் அடைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி புஷ்ரா கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஹில்டாப் மான்சனில் தன்னுடைய தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்