சென்னை: ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குட் பேட் அக்லி படத்தின் தயாரிப் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் GBU என்று என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தற்போது வரை இந்த திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தப் படத்தில் இளையராஜா இசையில் வெளியான ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி சஞ்சள் குருவி, இளமை இதோ இதோ என்ற 3 பாடங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பாடல்களை தனது அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் ரூ.5 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் விளம்பர வீடியோவில் தனது இசையில் உருவான தங்க மகன் படத்தில் இடம் பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா.
அதே போல், கடந்த 2017ம் ஆண்டு பின்னணி பாடகர் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை பாடியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா. இதையடுத்து எஸ்பிபியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இனிமேல் இளையராஜா பாடல்களை என்னுடைய கச்சேரிகளில் பாட மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அஜித் நடித்த குட் பேட் அட்லி படத்திற்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்படித்தக்கது.
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}