WOW.. நாமெல்லாம் பேசிட்டிருந்த அந்த கேப்புல.. இளையராஜா என்ன செஞ்சு முடிச்சிருக்கார் பாருங்க!

May 16, 2024,07:09 PM IST

சென்னை: தன்னைப் பற்றி நாலாபுறமும் சுற்றிக் கொண்டிருந்த விமர்சனங்கள், வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இசைஞானி இளையராஜா சத்தமே இல்லாமல் ஒரு அதிரடியான வேலையைச் செய்து முடித்துள்ளார். அதாவது ஒரு சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறாராம் இளையராஜா. இதை அவரே சந்தோஷமாக அறிவித்துள்ளார்.


இசைஞானி இளையராஜா குறித்து சமீப நாட்களில் காரசாரமான விவாதங்கள் ஓடிக் கொண்டுள்ளன. சமீப காலமாக என்றில்லை. சில வருடங்களாகவே அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், விவாதங்கள் ஓடிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் எதையுமே அவர் கண்டு கொள்வதில்லை. அவரது வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்.


இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவைப் போட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறியுள்ள செய்தியால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.. காரணம், மாபெரும் இசை விருந்து குறித்த தகவல்தான் அது. இளையராஜாவின் பேச்சிலிருந்து...




எல்லோருக்கும் வணக்கம். தினமும கேள்விப்படுகிறேன். என்னைப் பற்றி இது மாதிரி ஏராளமான வீடியோக்கள் வருகிறது என்று. எனக்கு வேண்டியவர்கள் வந்து சொல்வாங்க. நான் அதில் கவனம் செலுத்துவதில்லை. ஏன்னா மத்தவங்களைக் கவனிப்பது எனது வே்லை அல்ல. எனது வேலையைக் கவனிப்பதுதான் எனது வேலை. எனது வழியில் நான் கிளியராக, சுத்தமாக போய்க் கொண்டிருக்கிறேன். 


நீங்கள் எல்லாம் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடிச்சுட்டேன். பிலிம் சாங்ஸ் கொடுத்துக் கொண்டும், சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் சென்று தலையைக் காட்டி விட்டு இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக முடித்திருக்கிறேன். 4 மூவ்மென்ட்ஸ்களில், அதாவது சிம்பொனி என்றால் எப்படி இருக்குமோ அப்படி..  எழுதி முடித்து விட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை, எனக்கு சந்தோஷமான செய்தியை சொல்லிக் கொள்கிறேன். 


பிலிம் மிசியூசிக் வேற,  பேக்கிரவுண்ட் மியூசிக் வேற.. எல்லாம் அதில் ரிப்ளக்ட் ஆச்சுன்னா அது சிம்பொனி கிடையாது. ப்யூர் சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறேன். உங்களுக்கு, ரசிகர்களுக்கு, என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா.


இளையராஜாவின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இளையராஜா சிம்பொனியை எழுதுவது இது முதல் முறையல்ல. முன்பே கூட லண்டனில் ஒரு சிம்பொனி இசையை அவர் அமைத்தார். ஆனால் அது வெளிவரவில்லை. இந்த நிலையில் முழுக்க முழுக்க புது சிம்பொனியை அவர் எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். இது இசை வடிவம் பெற்று வெளி வரும்போது மாபெரும் இசை விருந்தாக அது அமையும், இளையராஜாவின் இசை ஞானம் மேலும் புகழ் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.


இளையராஜாவின் அறிவிப்பு வீடியோ

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்