அதிகாலையில் கனவா.. அதில் இதெல்லாம் வந்துச்சா?.. அப்படீன்னா பணம் கொட்டோன்னு கொட்டப் போகுதுங்க!

Jul 07, 2024,07:10 PM IST

சென்னை: கனவுகள் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் நம்முடைய ஆழ்மன நினைவுகளின் வெளிப்பாடு தான் கனவுகள் என்றும், நாம் உறங்கும் போது பிரபஞ்ச சக்தியும், முன்னோர்களும் நம்முடன் தொடர்பு கொண்டு நம்முடைய எதிர்காலம் குறித்த சில விஷயங்களை அறிவுறுத்துவதன் அடையாளம் தான் கனவுகள் என சொல்லப்படுகின்றன. அதிலும் அதிகாலையில் காணும் கனவுகள் மிகவும் முக்கியமானவையாகும். இவைகள் நம்முடைய எதிர்காலம் பற்றிய முக்கிய விஷயத்தை நமக்கு சொல்வதாகும்.


அப்படி சில குறிப்பிட்ட பொருட்களை உங்களுடைய கனவில் அதிகாலை வேளையில் கண்டால் அது உங்களை தேடி பணமும், செல்வ வளம் வரப் போவதற்கான அறிகுறிகள் என சொப்பண சாஸ்திரம் சொல்கிறது. இந்த பொருட்களை உங்கள் கனவில் கண்டால் சந்தோஷம், அதிர்ஷ்டம் வரும் என்றும் சொல்லப்படுகிறது. 


அதிர்ஷ்டம் தரும் கனவுகள் :




* தங்க காசு - தங்க காசுகளை உங்களுடைய கனவில் கண்டால் உங்களை தேடி அதிர்ஷ்டம் வரப் போவதாகவும், பண வரவு அதிகரிக்க போவதாகவும் அர்த்தம். தங்க காசுகள் செல்வ வளத்தையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் குறிக்கக் கூடியவையாகும்.


* பழங்கள் - பல வகையான பழங்களை உங்களின் கனவில் கண்டால் பணம் பல வழிகளிலும் வரப் போகிறது, அதிகப்படியான மகிழ்ச்சி வரப்போவதாகவும் அர்த்தம்.


* நீர் வீழ்ச்சி - அருவியில் நீர் கொட்டுவதை போல் கனவு கண்டால் இதுவரை நீங்கள் சந்தித்த இழப்புகள் அனைத்தும் நீங்கி, அருவி போல் உங்கள் வாழ்க்கையில் பணம் பொழிய போவதாக அர்த்தம்.


* பறவைகள் - பறவைகள் பறப்பதாக கனவு கண்டால் அது சாதனை, உல்லாசத்தின் அடையாளமாகும். வானத்தை போல் உங்களின் வாழ்க்கை உயர போவதாகவும், தாராளமாக பணம் புரள போவதாகவும் அர்த்தம்.


* புதிய வீடு - புதிதாக கட்டிய வீடு உங்கள் கனவில் வந்தால் நிலையான செல்வம், பாதுகாப்பு, பண வரத்து, பலம் ஆகியவை அதிகரிக்க போவதாக அர்த்தம். உங்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்க போவதாக அர்த்தம்.


* தெளிவான வானம் - தெளிவான, நீல நிற வானத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களின் பணக் கஷ்டம் தீரப் போவதாக அர்த்தம். உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போவதாக அர்த்தம்


* பூ மாலை - பொதுவாக பூக்களை கனவில் காணுதல் நல்லதாக கருதப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக கருதப்படும் பூ மாலைகளை கனவில் கண்டால் வெற்றிகளும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரப் போவதாக அர்த்தம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.


* பசுமையான வயல்கள் - பசுமையான வயல்வெளிகளை கனவில் காண்பது வெற்றிக்கான அறிகுறியாகும். விரைவில் உங்களின் வாழ்க்கை பசுமையாக மாறப் போகிறது, நிதி நிலை உயரப் போகிறது, உங்களின் கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன் மிக விரைவிலேயே கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்